duraivaiko [Imagesource : Duraivaiko]
மல்யுத்த வீராங்கணைகளாக, வீரர்களாக நாட்டிற்காக விளையாடி பெருமைசேர்த்து வருபவர்களின் இரத்தக்கண்ணீருக்கு ஒன்றிய அரசு பதில் கூறியே தீரவேண்டும் என துறை வைகோ ட்வீட்.
இந்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து அவரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர். புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, தங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதனை கைவிட்டனர். இதுகுறித்து துறை வைகோ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘மல்யுத்த வீரர்களின் நீதிக்கானப் போராட்டம் வெல்லட்டும்! ஏழ்மையும் வறுமையும் தாண்டவம் ஆடும் எளியகுடும்பத்தில் பிறந்த தங்கள் முயற்சி,ஊக்கத்தால் மல்யுத்த வீராங்கணைகளாக, வீரர்களாக நாட்டிற்காக விளையாடி பெருமைசேர்த்து வருபவர்களின் இரத்தக்கண்ணீருக்கு ஒன்றிய அரசு பதில் கூறியே தீரவேண்டும்.
ஐபிஎல் சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடி மகிழும் சமூகம், நான்கு மாத காலத்திற்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…