Conjuring Kannappan - Thalapathy 68 [File Image]
துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கிய பின்பு, தற்போது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி உள்ளார். ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள அந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியான நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேற்று படத்தின் இரண்டாம் பாடலை அறிவிக்கும் வகையில், வித்தியாசமாக கவனம் ஈர்க்கும் வகையில், ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருந்தனர். அதில், தளபதி 68 திரைப்படம் அப்டேட் கேட்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் அறிவித்தபடி, இன்று “கான்ஜூரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பாடலை ‘தளபதி 68’ படக்குழுவான இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, பிரேம் ஜி, நடிகர் வைபவ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இதற்கு காரணம், சதீஸ் நடிக்கும் இந்த படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தியின் தயாரிப்பு நிறுவனம் தான் தளபதி 68 படத்தை தயாரிக்கிறது, யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 அப்டேட்…புது படத்தை ப்ரோமோஷன் செய்த நடிகர் சதீஷ்!
இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில் நடிகை ரெஜினா, நாசர், ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ராம், ஜேசன் ஷா, பெனடிக்ட் காரெட், நமோ நாராயணா, ஆதித்ய கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…