karunagarajan [Imagesource : ABPnadu]
அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை என கருநகராஜன் பேட்டி.
சென்னையில் கருநகராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணாமலைக்கு எதிரான அதிமுகவின் கண்டன தீர்மானத்தை எதிர்க்கிறோம். சி.வி.சண்முகத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை; சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் மனம்போன போக்கில் பேசுகின்றனர்.
மாநிலத்தலைவர் அண்ணாமலையில் கருத்தும், தமிழ்நாடு பாஜகவின் கருத்தும் வேறு வேறு இல்லை; ஜெயலலிதாவுக்கு என்றும் நாங்கள் மரியாதை கொடுப்போம். அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை. அண்ணாமலை பொம்மை தலைவர் அல்ல, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்.
அண்ணாமலையை பொம்மையென செல்லூர் ராஜு கூறியது தான் கோமாளித்தனமாக உள்ளது. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜக தான் உதவியது. அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகத்தில் மாபெரும் மரியாதை உள்ளது. அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பொறாமை உள்ளது. அதனால் தான் அண்ணாமலையை இவ்வாறு பேசுகின்றனர்.
யார் யாருக்கு சுமை, யார் யாரை சுமந்தனர் என்பது மக்களுக்கு தெரியும். கூட்டணியை தீர்மானிக்க இன்னும் காலம் உள்ளது. கூட்டணியை முடிவு செய்வது பாஜக தலைமை. கூட்டணி என்பது பொதுவான ஒன்று. கூட்டணியில் பெரியண்ணன் என்பது இல்லை. ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதிமுகவின் இந்த செயல் திமுகவுக்கு வாய்ப்பளித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…