Supreme court of india [Image source : PTI]
கஸ்டம்ஸ் அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியாது என செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த கபில் சிபல் அவர்கள் தனது வாதத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், அமலாக்கத்துறை காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அவர்களால் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்? நேரடியாக கைது செய்து விசாரணை நடத்த முடியுமா? கஸ்டம்ஸ் அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியாது. போலீசாரிடம் தான் ஒப்படைக்க முடியும் தனது வாதத்தை முன் வைத்துள்ளார்.
முன்னதாக நேற்று, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில்நடைபெற்றது. அப்போது நீதிபதி நிஷா பானு கூறுகையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன். அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…