மதுரை மாநகரை வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது , மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல அது திராவிட நாகரித்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் 2000 ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இன்று இருக்கும் ஒரே நகரம் மதுரை மட்டும் தான் என்று கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை மதுரைக்கு அருகில் கீழடியில் நடத்திய அகழ்வாய்வில் 2300 ஆண்டுக்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 1500 க்கும் மேற்பட்டவை இன்றைய தொல்பொருள்கள் நாகரிகத்தின் அடையாளமாக உலகிற்கு பறைசாற்றி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மதுரை நகரம் இந்திய பண்பாடு வரலாற்றில் தனித்த இடத்தையும், மனிதகுல வளர்ச்சிக்கு தனித்துவ பங்களிப்பையும் செலுத்திய நகரமாகும். எனவே, மதுரையை வரலாற்று பாரம்பரிய மிக்க நாகரிகமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…