குடியரசு தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்த திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து
நாட்டின்15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு கடந்த வருடம் ஜூலை – 25 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிலையில், குடியரசு தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்த திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பும் முன்னேற்றத்திற்கான இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிப்பதாக பதிவிட்டுள்ளார்.
unknown node