நீட் தேர்வை திணித்தது காங்கிரசும், திமுகவும் தான். திமுகவும் காங்கிரசும் இதைவிட பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு செய்துவிட முடியாது என பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்திய சுயசார்பு பாரதம் குறித்த காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு எப்படி வந்தது என்பதும், யார் கொண்டு வந்தார்கள் என்பதும் அனைவருக்குமே தெரியும். மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது தமிழகத்துக்கு எதிரானது என தற்போது திமுகவினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இது மாணவர்களுக்கு எதிரானது என்று தெரிந்தும் நீட் தேர்வை திணித்தது காங்கிரசும், திமுகவும் தான். திமுகவும் காங்கிரசும் இதைவிட பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு செய்துவிட முடியாது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…