Congress State President KS Alagiri [Image source : The Hindu]
சென்னையில் சமீபத்தில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும். இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பது நிலையானது, அதாவது மாற்ற முடியாதது என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு கண்டனங்களும், வரவேற்பும் எழுந்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறுகையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தில் நியாயம் இருக்கிறது
பெண்களை உடன்கட்டை ஏற செய்தது தான் சனாதனம்; தமிழ் மண் இதையெல்லாம் போராடி வென்ற மண்.திமுகவும், காங்கிரஸும் இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்; நாங்களும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் தான். கடவுள் மறுப்பு என்பது வேறு, மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்ற சொல்வது என்பது வேறு. சனாதன மறுப்பு என்பது கடவுள் மறுப்பு அல்ல என தெரிவித்துள்ளார்.
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…