BJP State President Annamalai [Image source : The Hindu ]
செந்தில் பாலாஜியை கோபாலபுரத்து குடும்பம் காப்பாற்றுவதைப் போல, அமைச்சர் பொன்முடியையும் காப்பாற்றப்படுவாரா..? என அண்ணாமலை கேள்வி.
2006 – 2011 திமுக ஆட்சியில், செம்மண் குவாரிகளில் அளவுக்கு மகன் 6 அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரின் மகன் கெளதம சிகாமணி,உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கௌதம சிகாமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுஅக்குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருது பதிவிட்டுள்ளார்.
அதில், அலமாரியில் இருந்து வெளியேறும் எலும்புக்கூடுகள் போல, திமுக அமைச்சர்கள் ஒவ்வொரு வாரமும் ஊழலை அம்பலப்படுத்தி வருகின்றனர். 2006-11ல் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசுக்கு ரூ.28.4 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தியதாக அவரை முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாறாக, செந்தில் பாலாஜியை கோபாலபுரத்து குடும்பம் காப்பாற்றுவதைப் போல, அமைச்சர் பொன்முடியையும் காப்பாற்றப்படுவாரா..?’ என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…