தெலுங்கானா விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாக தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் உள்ள தெலுங்கானா பவனில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ், கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தில் அவர், தெலுங்கானா அரசு விவசாயிகளின் உரிமையைக் கோருகிறது என்றும், அரசை கவிழ்க்கும் வல்லமை கொண்ட விவசாயிகளின் உணர்வுகளுடன் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாகவும், அதன் பிறகு நாங்கள் முடிவு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…