’24 மணிநேரம் மட்டுமே’ – பிரதமருக்கு கெடு விதித்த தெலுங்கானா முதல்வர்…!

Published by
லீனா

தெலுங்கானா விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாக தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். 

தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்த  நிலையில், இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் உள்ள தெலுங்கானா பவனில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ்,  கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தில் அவர், தெலுங்கானா அரசு விவசாயிகளின் உரிமையைக் கோருகிறது என்றும், அரசை கவிழ்க்கும் வல்லமை கொண்ட விவசாயிகளின் உணர்வுகளுடன் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.  மேலும்,  விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாகவும், அதன் பிறகு நாங்கள் முடிவு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய ‘ரத்து’ நோட்டீஸ்! 

ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய ‘ரத்து’ நோட்டீஸ்!

டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…

6 minutes ago

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…

20 minutes ago

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? அமைச்சர் கூறிய முக்கிய தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் உறுப்பினர்கள்…

55 minutes ago

9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…

1 hour ago

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சட்டப்பேரவையில் பாராட்டி மகிழ்ந்த முதலமைச்சர்!

சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…

2 hours ago

30 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் கிடையாது! ஆனால்?! – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…

3 hours ago