தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்ட சம்பவங்களில் தமிழக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் . கடந்த ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜரான பொன்.மாணிக்கவேல் சிலைகள் கடத்தலில் தமிழக அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, உரிய ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…