இபிஎஸ் எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!

இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் 6 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகவும், அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் 6 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் உத்தரவை ரத்து செய்யக்கோரி ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுந்திருந்தனர். இந்த நிலையில், இவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்று, இதுதொடர்பாக 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்