ஜெலென்ஸ்கியின் அமைதித்திட்டம், முட்டாள்தனம்! தீவிர முயற்சி எதுவும் இல்லை- ரஷ்யா

Default Image

ஜெலென்ஸ்கியின் சமாதான திட்டம், முட்டாள்தனம், எந்தவித தீவிர முயற்சியும் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா -உக்ரைன் போர் கடந்த பிப்ரவரியில் தொடங்கி கிட்டத்தட்ட 11 மாதங்களாக நடைபெற்றுவருகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் போரை நிறுத்தும் வகையில் உலகநாடுகளின் ஆதரவைக்கோரிவருகிறார். மேலும் அதிபர் ஜெலென்ஸ்கி, போரை நிறுத்தும் முயற்சியில் 10 அம்ச அமைதித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஜெலென்ஸ்கியின் இந்த அமைதித்திட்டம் முற்றிலும் முட்டாள்தனமானது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். உக்ரேனியப் பிரச்சினையில், ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வந்தால், ரஷ்யா எதற்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறது.

ஆனால் இதுவரை எந்தவித தீவிரமான திட்டங்களும் எங்களிடம் முன்மொழிய வரவில்லை, நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம், நீங்களே முடிவு செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்