பாகிஸ்தான் : அப்பாவி மக்களை கேலி செய்வதும் அவர்களை துன்புறுத்துவதும் எப்போதும் நல்ல விஷயம் இல்லை. அப்படி செய்தால் உடனடியாகவே அதற்கு தண்டனை கிடைத்துவிடும். அதற்கு உதாரணமாக தான் இப்போது ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே உள்ள ஏரியில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டு வாகனத்தை கழுவி கொண்டு இருந்தார்கள்.
அப்போது அந்த நேரத்தில் ரயில் அந்த பகுதியில் வந்ததை கவனித்த இளைஞர்கள் ரயிலில் இருப்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து விளையாடலாம் என மோசமான சம்பவத்தில் ஈடுபட்டனர். ரயில் வந்த பிறகு தன்னுடைய பைக்கில் ஆக்ஸிலேட்டரை திருக்கி ரயிலில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்கள்.
இதனை அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகவும் பதிவு செய்தார். ஓட்டும் ரயில் எங்கே நிற்க போகிறது என விளையாட்டாக அந்த இளைஞர்கள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டிருந்த சூழலில், திடீரென ரயில் நின்றது . நின்றவுடன் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ரயிலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
பிறகு ரயிலில் இருந்து கீழே இறங்கிய சிலர் இளைஞர்களை தாக்கி இது என்ன செயல் என்பது போல கூறி தாக்கினார்கள். இதனை பார்த்த இளைஞர்கள் தெறித்து ஓடினார்கள். பிறகு தண்ணீர் தெளித்து கொண்டிருந்த அந்த பைக்கையும் ரயிலில் ஏற்றினார்கள். ரயிலும் அதன் பிறகு கிளம்பியது. பைக் போன கோபத்தில் கீழே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கற்களை கொண்டு ரயில் பெட்டிகள் மீதும் வீசினார்கள்.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், சம்பவம் இவ்வளவு தீவிரமாக இருந்தபோதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இளைஞர்களின் பொறுப்பற்ற நடத்தைக்காக ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…