pakistan [file image]
பாகிஸ்தான் : அப்பாவி மக்களை கேலி செய்வதும் அவர்களை துன்புறுத்துவதும் எப்போதும் நல்ல விஷயம் இல்லை. அப்படி செய்தால் உடனடியாகவே அதற்கு தண்டனை கிடைத்துவிடும். அதற்கு உதாரணமாக தான் இப்போது ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே உள்ள ஏரியில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டு வாகனத்தை கழுவி கொண்டு இருந்தார்கள்.
அப்போது அந்த நேரத்தில் ரயில் அந்த பகுதியில் வந்ததை கவனித்த இளைஞர்கள் ரயிலில் இருப்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து விளையாடலாம் என மோசமான சம்பவத்தில் ஈடுபட்டனர். ரயில் வந்த பிறகு தன்னுடைய பைக்கில் ஆக்ஸிலேட்டரை திருக்கி ரயிலில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்கள்.
இதனை அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகவும் பதிவு செய்தார். ஓட்டும் ரயில் எங்கே நிற்க போகிறது என விளையாட்டாக அந்த இளைஞர்கள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டிருந்த சூழலில், திடீரென ரயில் நின்றது . நின்றவுடன் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ரயிலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
பிறகு ரயிலில் இருந்து கீழே இறங்கிய சிலர் இளைஞர்களை தாக்கி இது என்ன செயல் என்பது போல கூறி தாக்கினார்கள். இதனை பார்த்த இளைஞர்கள் தெறித்து ஓடினார்கள். பிறகு தண்ணீர் தெளித்து கொண்டிருந்த அந்த பைக்கையும் ரயிலில் ஏற்றினார்கள். ரயிலும் அதன் பிறகு கிளம்பியது. பைக் போன கோபத்தில் கீழே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கற்களை கொண்டு ரயில் பெட்டிகள் மீதும் வீசினார்கள்.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், சம்பவம் இவ்வளவு தீவிரமாக இருந்தபோதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இளைஞர்களின் பொறுப்பற்ற நடத்தைக்காக ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…