Categories: உலகம்

கொரோனாவை விட கொடிய X.! 5 கோடி உயிர்களை பறிக்கும்.! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்.!

Published by
மணிகண்டன்

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் யுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (கோவிட் 19 ) கிட்டத்தட்ட 2 வருடங்கள் உலக நாட்டையே ஆட்டிப்படைத்தது என்று கூறலாம்.  இன்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு சில நாடுகள் பொருளாதார ரீதியில் தவித்து வரும் சூழலை காண்கிறோம்.

தற்போது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் உரிய தடுப்பூசி வழங்கப்பட்டு பெரும் தொற்று தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது ஆராய்ச்சியாளர்கள் குழு தற்போது புது வைரசை கண்டுபிடித்துள்ளதாகவும், அதன் தாக்கம் கோவிட் 19ஐ விட அதிகமாக இருக்கும் என அறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸிற்கு உலக சுகாதார அமைப்பு (WHO)  வைரஸ் எக்ஸ் (X) என்று பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு குறித்து இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் கூறுகையில், இந்த X வைரஸானது , கொரோனா வைரஸை விட 20 மடங்கு ஆபத்தானது. ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்களை உள்ளடக்கிய 25 வைரஸ் குடும்பங்களை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

கண்டுபிடிக்கப்பட்ட X  வைரஸ் கோவிட் தொற்றை போலவே உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த X வைரஸானது மரபுவழி நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம், இது ஒரு ஆர்என்ஏ வைரஸாக இருக்கலாம் எனவும், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. மேலும் இந்த வைரஸ் தொற்றானது கோவிட்19 போல உலகளாவிய நோய் கண்காணிப்பை அமல்படுத்தும் சூழல் ஏற்படும் என்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த X  வைரஸை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு பின்பற்றிய அதே கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு உத்திகளை மீண்டும் அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், இந்த வைரஸ் கொரோனாவை விட 20மடங்கு ஆபத்தானது என்றும், இந்த வைரஸ் வெளி உலகத்திற்கு பரவினால் இதன் மூலம் சுமார் 50 மில்லியன் (5 கோடி) இறப்புகள் எழக்கூடும் என்றும் இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

7 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

11 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

11 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

12 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

12 hours ago