பிரித்தானிய கோடீஸ்வரர் ஆலன் சுகர் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் “சோம்பேறிகள்” மற்றும் குறைவான ஊதியம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய ட்வீட் ட்விட்டரில் கணிசமான பின்னடைவை உருவாக்கியுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வதால், வைட்ஹால் அலுவலகங்களை £1.5 பில்லியனுக்கு அரசாங்கம் விற்பனை செய்வதைப் பற்றி பத்திரிகையாளர் ஆண்ட்ரூ பியர்ஸ் ட்வீட் செய்தபோது “அரசு ஏன் பணியார்களை அலுவலகங்கலுக்கு திரும்ப உத்தரவிடவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
“சோம்பேறிகள் வேலை செய்யும்போது வீட்டில் கோல்ஃப் மற்றும் டென்னிஸ் பார்க்கிறார்கள். வரியை நாங்கள் செலுத்துகிறோம். வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழையுங்கள் அல்லது பணிநீக்கம் செய்யுங்கள்” என்று சுகர் பதிலளித்தார்.
unknown node“வீட்டிலிருந்து வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட வாழ்க்கையை விரும்பும் சோம்பேறிகள். செவிலியர்கள், மருத்துவர்கள், கிளீனர்கள், உணவக ஊழியர்கள், பில்டர்கள் மற்றும் அலங்கரிப்பவர்கள், டாக்சி மற்றும் டிரக் டிரைவர்கள் போன்றவர்களால் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாது, அதனால் சோம்பேறிகளுக்கு சேவையை வழங்குகிறார்கள்,” என்று சுகர் முந்தைய ட்வீட்டில் கூறினார்.
unknown node