Accident [File Image]
எகிப்தின் பெஹெய்ரா கவர்னரேட்டில் அலெக்ஸாண்ட்ரியா பாலைவன சாலையில் பெஹெய்ராவுக்கு அருகில் பயணித்த காரில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த ரோட்டில் வந்த பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எறிந்துள்ளதுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எகிப்தில் அதிவேகமாகச் செல்வதாலும், சாலைகள் மோசமாக காணப்படுவதாலும், போக்குவரத்துச் சட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தாததாலும் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில்,அந்த புகைப்படத்தில், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கிடப்பதையும், கார்கள் பற்றி எரிவதையும் காணலாம்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…