அமெரிக்கா மிசோரியின் கன்சாஸ் நகரில் பேஸ் பால் உள்ளூர் விளையாட்டு தொடரில் வெற்றிபெற்ற கன்சாஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெற்றி பேரணியை நேற்று புதன் கிழமை நடத்தினர். அந்த பேரணியின் போது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பேரணியில் திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்த துப்பாக்கி சூட்டில் டிஜேயாக வேலை செய்து வந்த லிசா லோபஸ்-கால்வன் என் பெண் பரிதமாக உயிரிழந்தார்.
தெற்கு காசாவில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல்..!
அமெரிக்க பேரணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு படையை சேர்ந்த ரோஸ் க்ரண்டிசன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறிய கூற்றுப்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களில் மிக ஆபத்தான காயங்களுடன் 8 பேரும், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் 7 பேரும் என பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மிசோரியின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக இதுவரை மூன்று நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என கன்சாஸ் நகர காவல்துறைத் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…