துருக்கி, சிரியா நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, 7700ஐக் கடந்தது.!

Default Image

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து 7700ஜக் கடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் பலத்த நிலநடுக்கம் (5.6 ரிக்டர் அளவு) ஏற்பட்டது, நேற்று முன்தினம் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 என பதிவாகியிருந்தது. இதன் அதிர்வு பல நாடுகள் வரை உணரப்பட்டது. மேலும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின, இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மீட்புக்குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுதும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ள இந்த நிலநடுக்கத்தின் கோர சம்பவத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஒட்டு மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 7700ஐயும் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்