துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை உயர்வு; 24,000-ஐ நெருங்கியது.!

Default Image

துருக்கி, மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24,000-ஐ நெருங்கியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்தி வாய்ந்த தொடர் நிலநடுக்கம், பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டிலுள்ள கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தன, இதனால் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து, தங்கள் சொந்தங்கள் மற்றும் உடமைகளை இழந்தனர்.

பல சர்வதேச நாடுகள் மீட்புக்குழுக்கள் மற்றும் உதவிக்கரம் கொடுத்து ஆதரவளித்து வருகின்றனர். இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்