துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 12,000-ஐக் கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் பல மாடிக் கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக்கட்டு சரிவது போல் இடிந்து விழுந்து சரிந்தன. இயற்கையின் இந்த கோர தாண்டவத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், மற்றும் படுகாயமடைந்தனர்.
இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பல சர்வதேச நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவிலிருந்தும் மீட்புக்குழுவினர், ராணுவத்தின் மோப்ப நாய்களுடனும் மற்றும் மருத்துவ உதவிக்குழுவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்திய மீட்புக்குழுவினரும் அங்கு துரிதமாக செயல்பட்டு தேடி வருகின்றனர். மருத்துவ குழுவும் தேவையான மருத்துவ உதவிகளை செய்த் வருகின்றனர். இந்த பேரழிவு கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் ஒட்டுமொத்தமாக இந்த பேரழிவுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,000 ஐயும் கடந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…