Tsunami Warning : சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தைவான், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானின் இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில் இன்று (02.4.2024) ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
அதனை போலவே, தைவான் தலைநகர் தைபேயில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கு இருக்கும் கட்டிடங்கள் சில சரிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
இதுவரை உயிர்சேதம் மற்றும் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும். இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதனை போல, 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் வானிலை மையம் தகவல் தெரிவித்ததாவது “25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவான் அருகே இன்று அதிகாலை, 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மியாகோஜிமா தீவு உட்பட தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் முற்கட்டமாக, 3 மீ., (10 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கலாம்” என குறுள்ளது. மேலும், இதனையடுத்து ஜப்பானிலில் 3 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…