“இந்தியாவை போல அமெரிக்காவில் தேர்தல் நடத்தனும்.,” டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!

அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு முறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும் அதில் சில முக்கிய திருத்தங்களை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

US President Donald Trump

வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகளை போல கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவையும் டிரம்ப் நேற்று (மார்ச் 25) பிறப்பித்தார்.

அமெரிக்காவில் வாக்குபதிவு நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பொதுத் தேர்தல்கள் என்பது இந்தியாவை போல நாடு முழுவதும் ஒரே தேர்தல் விதிகள் என்றில்லாமல், மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுவதால், விதிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடுகிறது. அதனை மாற்றியமைத்து ஒருங்கிணைந்த மாற்றங்களை இந்திய தேர்தல் நடைமுறையுடன் ஒப்பிட்டு வழிவகுத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்கா வாக்குபதிவு பழைய நடைமுறை :

  • அமெரிக்காவில் வாக்காளர்கள் தாங்களாகவே முன்வந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை நேரடி அலுவலகங்கள் அல்லது ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். இதில் குறிப்பிட்ட மாநிலங்களில் தான் அமெரிக்க குடியுரிமை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பல மாநிலங்களில் ஆவணச் சான்று கட்டாயமில்லை.
  • 36 மாநிலங்களில் வாக்களிக்கும் போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை (புகைப்படத்துடனோ அல்லது புகைப்படம் இல்லாமலோ) கேட்கப்படுகிறது. சில மாநிலங்களில் மட்டுமே புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் எனும் கடுமையான தேர்தல் விதிகள் உள்ளன.
  • அஞ்சல் வாக்குகளை பொறுத்தவரை சில மாநிலங்களில் மட்டுமே கையொப்பம் சரிபார்க்கப்படுகிறது. பல மாநிலங்களில் கூடுதல் அடையாளச் சான்றுகள் தேவையில்லை. அங்கு கையெழுத்தும் சரிவர பரிசோதிக்கப்படவில்லை.
  • தேர்தல் நாளுக்குப் பிறகு வந்த அஞ்சல் வாக்குகளை சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்கின்றன. சில மாநிலங்கள் அதனை ஏற்பதில்லை.

டிரம்ப் கொண்டு வந்த புதிய நடைமுறைகள் :

  • டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த புதிய நிர்வாக உத்தரவின் படி, வாக்காளர் பதிவின் போது பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் நாளுக்குப் பிறகு வந்த அஞ்சல் வாக்குகள் எண்ணப்படாது என்று விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பல மாநிலங்களில் உள்ள தற்போதைய நடைமுறையை மாற்றும்.
  •  மாநிலங்கள், அமெரிக்க குடியுரிமை இறப்பு சான்றுகள் உள்ளிட்ட மத்திய தரவுத்தளங்களை பயன்படுத்தி வாக்காளர்களின் தகுதியை சரிபார்க்க வேண்டும். அதனை மீறும் மாநிலங்களுக்கு மத்திய அரசில் இருந்து தரப்படும் நிதி நிறுத்தப்படும்.
  • அஞ்சல் வாக்குகளை குறைத்து, நேரடி வாக்கு மற்றும் காகித வாக்குச் சீட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்