Categories: உலகம்

Shocking : தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதால் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட 20 வயது இளைஞன்..!

Published by
லீனா

ஸ்விஸ் நாட்டில் தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதால், ஸ்பான்டேனியஸ் நிமோமெடியாஸ்டினம் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞன். 

ஸ்விஸ் நாட்டில் வின்டர்தூரில் உள்ள கன்டோனல் மருத்துவமனையில், 20 வயது இளைஞன் மூச்சுத் திணறல் மற்றும் உடல் முழுவதும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞனுக்கு ஸ்பான்டேனியஸ் நிமோமெடியாஸ்டினம் என்ற பிரச்னை இருப்பதை கண்டறிந்தனர்.

இது நுரையீரலில் இருந்து காற்று கசிந்து விலா எலும்பில் அடைக்கப்படும் போது ஏற்படக்கூடிய ஒரு அரிய தீங்கான நோயாகும். இதன் காரணமாக நுரையீரலில் காயமும் ஏற்படுகிறது. இந்த நோய் பொதுவாக இளைஞர்களை பாதிக்கிறது. தீவிர உடற்பயிற்சி அல்லது கட்டுப்படுத்த முடியாத இருமல் போன்ற பிரச்சனைகளால் இந்த நோய் ஏற்படுகிறது.

ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை, புகைபிடிக்கவில்லை, போதைப்பொருள் பயன்படுத்தவில்லை, இருமல் பிரச்சனையால் பாதிக்கப்படவில்லை. ஆனால், அவர் மருத்துவரிடம் தான் தீவிர சுய இன்பத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த ஆய்வின் முதன்மை ஆசிரியர்களான டாக்டர். நிகோலா ராஜிக் மற்றும் டாக்டர். கிறிஸ்டியன் ஷாண்டல் ஆகியோர் கூறுகையில், இந்த பிரச்னை தீவிர உடலுறவு காரணமாக ஏற்பட்டது. அந்த நபர் வீங்கிய முகத்துடன், கழுத்து, மார்பு மற்றும் முழங்கைகள் வரை கேட்கக்கூடிய ஒரு முணுமுணுப்பு சத்தத்துடன் மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் அந்த நபரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு, தொற்றுநோயைத் தடுக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன. அடுத்த 24 மணி நேரத்தில் அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். பின் 3 நாட்களுக்கு பின் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

29 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

42 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

1 hour ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

2 hours ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

2 hours ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

3 hours ago