மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள பரியா மைதானத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 பார்வையாளர்கள் கூடியிருந்த பரியா மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விழாவின் போது தொடக்க விழாவில் கலந்து கொண்ட மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்தார். பிறகு திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதத்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலின்போது தொலைந்து போன பொருட்களில் குவிந்திருந்த மக்கள் தங்கள் காலணிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்.
இந்த சோகமான சம்பவத்தில் “இதுவரை 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும் 107 பேர் காயமடைந்துள்ளனர்” எனவும் எதிர்க்கட்சி எம்பி ஹனித்ரா ரசாபிமானன்சோவா உள்ளூர் வானொலி நிலையத்தில் தெரிவித்தார். காயம் அடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், கிட்டத்தட்ட சுமார் 28 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவின் மிகப்பெரிய பரியா ஸ்டேடியம் கடந்த 2019-ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு பேரழிவை சந்தித்தது. நாட்டின் தேசிய விடுமுறையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது குறைந்தது 16 பேர் உயிரிழந்தார்கள் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…