வரலாற்றில் இன்று…தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யு.போப் பிறந்தநாள்..!

Published by
செந்தில்குமார்

ஜி.யு.போப் வாழ்க்கை :

செந்தமிழ்ச் செம்மல் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப், அதாவது ஜியார்ஜ் யுக்ளோ போப் ஏப்ரல் 24ம் தேதி 1820ம் ஆண்டு கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஜான் போப், கேதரின் போப் ஆவர். அவரது குழந்தைப் பருவத்திலேயே 1826ம் ஆண்டு இங்கிலாந்துக்குக் குடும்பத்துடன் குடியேறினர்.

G-U-Pope
G-U-Pope [File Image]

ஜி.யு.போப் படிப்பு:

ஜி.யு.போப் தனது 19 வயது வரை ஹாக்ஸ்டன் என்ற கல்லூரியில் கல்வி பயின்றார். அதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ் மீது பெரும்பற்று கொண்ட போப் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை 1886ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து புறநானூறு, புறப்பொருள்வெண்பாமாலை போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.

G-U-Pope 2 [File Image]

தமிழகம் வருகை :

ஜி.யு.போப் 1839ம் ஆண்டு விவிலிய நூற்கழகத்தில் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். வரும் வழியில் கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றுக்கொண்டார். அதன்பின், வெஸ்லியன் சங்கம் சார்பாகச் சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கி, இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அச்சங்கத்தால் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்திற்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ்நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர் ஜி.யு.போப் ஆவார்.

G-U-Pope 3 [Image Source : flickr]

சிறப்பு பெயர் மற்றும் இறப்பு :

ஜி.யு.போப் அவர்களுக்கு வேத சாஸ்திரி, தமிழ் பாடநூல் முன்னோடி மற்றும் செந்தமிழ்ச் செம்மல் என்ற சிறப்பு பெயர்கள் உள்ளன. மேலும், 1871ம் ஆண்டு சில தனிப்பட்ட சூழல் காரணமாகப் பெங்களூர் சென்று அங்குக் கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு அவரது உடல் நலம் சரியில்லாத காரணத்தால் 1882ம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். தம் கல்லறையில் “தமிழ் மாணவன்” என்று பொரிக்க வேண்டும் என்று கூறிய ஜி.யு.போப் 1908ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி இயற்கை எய்தினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

2 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

2 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

3 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

4 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

4 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

5 hours ago