உக்ரைனுக்கு, ஜெர்மனி போர் விமானங்களை அனுப்பாது என்று சான்சிலர் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக, 14 சிறுத்தை 2 A6 ரக (Leopard 2 A6) டாங்கிகளை அனுப்புவதற்கு ஜெர்மன் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பாது என்று ஜெர்மனியின் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய போரில், ஆயுதங்கள் என்று வரும்போது நான் ஆலோசனை மட்டும் கூற முடியும் எனவும், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் போர் எதுவும் இல்லை, அதற்கான தீவிரத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஓலாஃப் மேலும் கூறினார். ரஷ்யாவின் படையெடுப்பை தடுப்பதற்கு உக்ரைன், மேற்கு நாடுகளிலிருந்து உதவியை நாடி வருவதால், ஜெர்மனி உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பாது என்று ஓலாஃப் வலியுறுத்தி கூறினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இது குறித்து தொடர்ந்து பேசுவது அவசியம் என்று ஓலாஃப் மேலும் கூறினார். ஆனால், ரஷ்யா தொடர்நது ஆக்கிரமிப்பு நடவடிக்கை செய்து போரை நடத்தும் வரை, தற்போதைய போர் நிலைமை மாறாது என்றும் தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…
சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக…
சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ…
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…