கனடாவில் அரசு அலுவலகங்களில் TIK TOK செயலி பயன்படுத்த தடை..!

Default Image

கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை. 

இன்று பெரும்பாலானோர் தங்களது பொழுதுபோக்காக சமூக வலைதளத்தை கொண்டுள்ள நிலையில், பலரும் டிக் டாக் செயலிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் அரசு அலுவலங்களில் டிக் டாக் செயலிக்கு தடை 

அந்த வகையில் கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த அந்நாட்டு பிரதமர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  அமெரிக்காவில் ஏற்கனவே அரசு அலுவலகங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்