Categories: உலகம்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் ஒரு காரணம்.? ஜோ பைடன் அதிர்ச்சி தகவல்.!

Published by
மணிகண்டன்

பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ் அமைப்பு இம்மாதம் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.  காசா நகர் ஹமாஸ் அமைப்பினரின் உறைவிடமாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா நேரடி ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு  பயணம் செய்து , இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும் என உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு.! 22 பேர் உயிரிழப்பு.!

இதனை தொடர்ந்து, அண்மையில் ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதாவது, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணம் இந்தியா – ஐரோப்பா இடையேயான சரக்கு போக்குவரத்து திட்டம் தான் என கூறியுள்ளார்.

கடந்த மாதம் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முதல் ஐரோப்பா வரையில் , இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் இந்த சரக்கு போக்குவரத்து பாதை (IMEEC) அமைக்கப்பட திட்டம் வகுக்கப்பட்டது.

இந்த சரக்கு போக்குவரத்து பாதையானது சீனா, பாகிஸ்தான் , ஈரான் என செல்லும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் (BRI) திட்டத்திற்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் , ஈரானின் தூண்டுதலின் பெயரில் ஹமாஸ் அமைப்பினர் , இந்தியா – ஐரோப்பா இடையேயான சரக்கு போக்குவரத்து திட்டமான IMEECவில் முக்கிய அங்கமாக இருக்கும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தபடுகிறது என அதிர்ச்சி தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

22 minutes ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

55 minutes ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

2 hours ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

2 hours ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

3 hours ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

3 hours ago