Guinness Couples [file image]
பிரேசில்: பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ் மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ என்ற அழகான க்யூட் தம்பதியினர் தான் இந்த உலகத்தில் மிக குறுகிய தம்பதியினர் என்று சாதனை படைத்துள்ளனர். இதனால் இவர்கள் உலக கின்னஸ் புத்தகத்திலும் அங்கீகரிக்கபட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டில் சந்தித்த இந்த காதல் ஜோடி, தங்கள் உறவை மேம்பபடுத்துவதற்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வலுவான பிணைப்பில் இருந்துள்ளனர். மேலும் இந்த 15 வருடங்களில் சமூக அழுத்தங்களுக்கு அடி பணிவதற்கு பதிலாக, இந்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டும், தங்கள் தனித்துவமான உடல் பண்புகளை ஏற்றுக்கொண்டும், நீடித்த ஒரு கூட்டாண்மையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
கின்னஸ் உலக சாதனைகளின் படி, இந்த ஜோடியின் ஒட்டு மொத்த உயரம் 181.41 செ.மீ ஆகும். பாலோவின் உயரம் 90.28 செ.மீ மற்றும் கட்யூசியாவின் உயரம் 91.13 செ மீ ஆகும். இவர்களின் இந்த கின்னஸ் உலக சாதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை படைத்த இந்த தம்பதியினர் இது குறித்து பேசிய போது, “நாங்கள் உருவத்தில் குறுகியவர்களாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு பெரிய இதயங்கள் மற்றும் எங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொருவரிடமும் நிறைய அன்பு உள்ளது.
எங்கள் வாழ்க்கையில் சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் இந்த சவால்களை ஒன்றாக சமாளிக்க போகிறோம் என்பதை நினைத்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறியுள்ளனர். தற்போது முறையே 31 மற்றும் 28 வயதான இந்த தம்பதியினர் ஆவணப்படுத்தப்பட்ட மிகக் குறுகிய திருமணமான ஜோடி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…