Arunachal Pradesh [File Image]
Arunachal Pradesh : கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சகம் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்றும், அருணாச்சலப் பிரதேசம் என்று இந்திய அரசால் சட்டவிரோதமாக அந்த பகுதி அழைக்கப்படுவதாகவும், அதனை சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சீனா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது .
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு கருத்து குறித்து அமெரிக்காவின் எதிர்ப்பை , வாஷிங்டனில் உள்ள இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் படேல் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மீதான சீன ஊடுருவலை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் வளர்ச்சி திட்டங்களால் அருணாச்சலப் பிரதேச மக்கள் தொடர்ந்து பயனடைந்து வருகிறார்கள். இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனாவின் சட்டவிரோத உரிமைகோரல்களை முன்வைத்து சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்களை நாங்கள் கவனித்து வருகிறோம்.
ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரமற்ற வாதங்களை மீண்டும் மீண்டும் சீனா சொல்வதால், அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, எப்போதும் இருக்கும். அதன் மக்கள் நமது வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களால் தொடர்ந்து பயனடைவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…