இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை இப்போது சில நிமிடங்களில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வந்த நிலையில் பல நிறுவனங்களில் மனித உழைப்பின் தேவையை குறைந்துள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் வரும் ஆபத்துகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இல்லையெனில் என்ன நடக்கும் என்பது தெரியாது. அப்படி ஒரு சம்பவம் தென் கொரியாவில் நடந்துள்ளது. ஒரு தொழிற்சாலையில் காய்கறி நிரப்பும் பெட்டி என நினைத்து வேலை செய்ய ஊழியரை தூக்கி வைத்த ரோபோ. தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாய விளைபொருள் விநியோக மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து சீல் செய்யும் பணிக்கு ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை அங்கு உள்ள ஊழியர் ஒருவர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. நிறுவன ஊழியரை காய்கறிப் பெட்டி என நினைத்து தூக்கி கன்வேயர் பெல்ட்டில் வைத்திருக்கிறது. ரோபோவின் இறுக்கமான பிடியிலிருந்து அந்த ஊழியர் தப்ப முடியாமல் திணறியுள்ளார். கன்வேயர் பெல்ட் உள்ளே சென்ற அந்த ஊழியரின் முகம் மற்றும் மார்பு பகுதி நசுக்கப்பட்டது. படுகாயமடைந்த நிலையில் அந்த ஊழியரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரோபோவிடம் சிக்கி பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். முன்னதாக மே மாத தொடக்கத்தில் தென் கொரியாவில் ஒரு ரோபோ ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் ரோபோவிடம் சிக்கி அங்கு வேலை செய்ய ஊழியர் காயமடைந்தார். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் மெடிசின் வெளியிட்ட ஆய்வின்படி, 1992 முதல் 2017 வரை அமெரிக்காவில் தொழில்துறை ரோபோக்களால் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…