ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய நிர்வாகம்.!

ani

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.

பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ டிவிட்டரில் உடனுக்குடன் செய்திகளை வெளியீட்டு எப்போதும்  டிவிட்டரில் ஆக்டிவாக இருந்து வந்தது. டிவிட்டரில் 7.6 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனம் இது தான் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், தற்போது ஏஎன்ஐ  பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.
ஏஎன்ஐ  டிவிட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் முடக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது. அது என்னவென்றால், ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கை தொடங்கியவரின் வயது 13-க்கும் கீழ் இருந்ததால்   காரணம் கூறி ட்வீட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்