லண்டன் : உடலுறவின் போது ரகசியமாக ஆணுறையை கழற்றிய நபருக்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் பகுதியில் வசித்து வரும் கை முகேந்தி (39) என்ற நபர் ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்ள நினைத்துள்ளார். ஆணுறை பயன்படுத்தி அந்த பெண் உடலுறவு கொள்ளவும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, உடலுறவின் போது, கை முகேந்தி ரகசியமாக ஆணுறையை கழற்றி உள்ளார். இதனை கண்ட அந்த பெண் சற்று அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். பாதிக்கப்பட்டவரின் உதவியுடன் தடயவியல் ஆதாரங்களையும் அதிகாரிகள் சேகரித்தனர்.
பின் இந்த வழக்கு லண்டன் கிரவுன்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், ஜூன் 13 அன்று பெண்ணின் அனுமதியின்றி உடலுறவின் போது அணிந்திருந்த ஆணுறையை அகற்றியதற்காக கை முகேந்திக்கு சிறை தண்டனை வழங்கியது. லண்டனில் பொருந்தும் தனியான சட்டங்களின் கீழ் ஆணுறை அகற்றுதல் கற்பழிப்புக்கு சமம் என்று கூறப்படுகிறது. எனவே, அதன் அடிப்படையில், கை முகேந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆணுறையை அகற்றிய இந்த வழக்கில் முகேந்திக்கு 4 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி லண்டன் கிரவுன் கோர்ட்டில் முகேந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பின் ஜூன் 13, வியாழன் அன்று அதே நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…