வர்ஜீனியாவில் உள்ள வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபர்! பலர் உயிரிழப்பு மற்றும் காயம்.!

Default Image

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள வால்மார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில் சாம்ஸ் சர்க்கிளில் உள்ள வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த புகாரையடுத்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். 40 நிமிடங்களுக்கு மேல் ஆய்வுக்குப்பிறகு அதிகாரிகள் கடையில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைக் கண்டுபிடித்தனர் என்று போலீஸ் அதிகாரி லியோ கோசின்ஸ்கி தெரிவித்தார்.

ஆனால் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை என்று கூறினார். எனினும் 10 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கிசூடு நடத்தியவரும் இறந்து கிடந்ததாக கோசின்ஸ்கி கூறினார்.

எங்கள் செசபீக், வர்ஜீனியா ஸ்டோரில் நடந்த இந்த சோகமான நிகழ்வில் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என்று வால்மார்ட் இன்று காலை ட்வீட் செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியிருந்தது. மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் 5 பேர் நோர்போக் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தித் தொடர்பாளர் மைக் காஃப்கா தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்