மலேசியாவில் 83 வயது மூதாட்டி ஒருவர் பஃபர் என்ற விஷ மீனைச் சாப்பிட்டதால் உயிரிழப்பு.
மலேசியாவின் ஜோகூரில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதினர், வழக்கமாக சாப்பிட்டு வந்த பஃபர் என்ற மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஆனால், அதில் விஷம் இருப்பது தெரியாமல் அந்த மீனை சாப்பிட்டதால், மார்ச் 25 அன்று அந்த தம்பதியினரின் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில், அவரது மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோகமான சம்பவம் குறித்து தம்பதியரின் மகள் Ng Ai Lee கூறுகையில், தனது தந்தை பஃபர் மீனை உள்ளூர் கடையில் இருந்து வாங்கியதாக கூறினார். என் பெற்றோர் பல ஆண்டுகளாக அதே மீன் சந்தையில் மீன் வாங்குகி உண்டு வருகிறார்கள். ஆனால், என் தந்தை அந்த மீனின் விஷம் குறித்து இருமுறை யோசிக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
எப்படி அறிகுறிகள் தென்பட்டது என்பது குறித்து தம்பதியரின் மகள் Ng Ai Lee பேசுகையில், மதிய உணவிற்காக அந்த மீனைச் சுத்தம் செய்து சமைத்த சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, தனது தாயார் நடுங்க ஆரம்பித்து மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்க ஆரம்பித்தார். பின்னர், தனது தந்தைக்கும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இதே போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கியது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என கூறினார்.
பின்னர், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்று மாலை அவரது தாயார் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இறப்புக்கான காரணம், “நரம்பியல் வெளிப்பாட்டுடன் கூடிய உணவு நச்சுத்தன்மை” என்று மருத்துவர்கள் தரப்பில்விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…