Categories: உலகம்

நேபாள நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 128ஆக உயர்வு.!

Published by
மணிகண்டன்

நேபாளம் தலைநகர் காத்மண்டில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில், லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு  6.4 என்ற ரிக்டர் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுமார் 15 நிமிடங்கள் வரையில் ஏற்பட்டது.

இதில் ஜாஜர்கோட் , ருகும் மாவட்டங்களில் கட்டிடங்கள் சரிந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஜாஜர்கோட் மாவட்டத்தில் 34 பேரும், ருகும் மாவட்டத்தில் 35 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காணாமல் போயிருந்த காரணத்தால் உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என கூறப்பட்டு இருந்தது.

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 69 பேர் உயிரிழப்பு.!

மீட்புப்பணிகளில், மீட்புபடையினர் உடன், நேபாள ராணுவம், காவல்துறை பொதுமக்களால் ஆகியோர் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் இதுவரை நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128ஆக உயர்த்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெய்லேக், சல்யான் மற்றும் ரோல்பா ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இருந்தும், பல்வேறு இடங்களில் தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி, பீகார் போன்ற இந்திய பகுதிகளிலும் நேபாள நிலநடுக்கம் உணரப்பட்டு இருந்தாலும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

51 minutes ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

3 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

4 hours ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

5 hours ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

5 hours ago