Categories: உலகம்

விறுவிறு வாக்குப்பதிவு.? மீண்டும் முடிசூடுவாரா ரிஷி சுனக்.? இங்கிலாந்தில் ஆட்சி மாற்றமா.?

Published by
மணிகண்டன்

இங்கிலாந்து: தேர்தல் கருத்து கணிப்புகளின்படி இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் உருவாகி தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டில் கடந்த 1997 முதல் 2010 வரையில் 13 ஆண்டுகள் தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. அடுத்து  2010ஆம் ஆண்டு முதல் தற்போது (2024) வரையில் 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ்க்கு அடுத்து தற்போது கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில். பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பொது தேர்தலானது அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக ரிஷி சுனக்கும் (Rishi Sunak), தொழிலாளர் கட்சி சார்பாக கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரதமர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

மொத்தமுள்ள 650 இடங்களில் குறைந்தது 326 இடங்களை வென்று பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். உள்ளூர் நேரப்பபடி இரவு 10 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்று நாளை (வெள்ளி) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தொடர்வாரா.? அல்லது புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது நாளை தெரிந்துவிடும்.

பன்னாட்டு செய்தி நிறுவனங்களில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, இங்கிலாந்து நாட்டின் பொது சேவைகளின் (அரசு) தற்போதைய நிலைமை, மக்களின் பொருளாதாரம், நாட்டின் வரி மற்றும் அயல்நாட்டினரின்  குடியேற்றம் ஆகியவை இந்த தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என கூறப்படுகிறது.

மேலும், இந்த முறை நிச்சயம் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.  இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள மொத்தம் 650 பிரிட்டன் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் இந்த தேர்தலில் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 hour ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

1 hour ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

2 hours ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

2 hours ago

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

2 hours ago

விறுவிறுப்பாக நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் … தற்போதய நிலவரம் என்ன?

ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…

3 hours ago