Categories: உலகம்

நாட்டை விட்டு தப்பிய பிரதமர்.. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! நடந்தது என்ன?

Published by
கெளதம்

வங்கதேசம் : பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு ஹெலிகாப்டரில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த போராட்டத்தில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் நடந்த புதிய போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

தியாகிகளின் வாரிசுகளுக்கான 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தியும் நடந்த போராட்டம் கலவரமானது. இடஒதுக்கீடு போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், ஹேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதனையடுத்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது பாதுகாப்பு கருதி அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு வந்துள்ளார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக, ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். தற்பொழுது, ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததாகவும், மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என உஸ்-ஜமான் உறுதியளித்துள்ளார்.

மேலும், இடஒதுக்கீடு போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவர், ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்துள்ளார். அவர் இங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் மகள் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

4 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

6 hours ago