முக்கியச் செய்திகள்

சீனாவில் நிமோனியா… மருத்துவமனையில் நிரம்பி வழியும் குழந்தைகள்.. அறிக்கை கேட்ட WHO..!

Published by
murugan

உலகம் முழுவதும் கொரோனா நோயை பரப்பிய சீனா தற்போது மீண்டும் ஒரு நோய் பிடியில் சிக்கி உள்ளது. சீனாவில் தற்போது குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிடம் இருந்து குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிமோனியா பாதிப்பு குறித்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளது.

நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள்:

சீனாவில் பெங்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற நகரங்களில் அதிகமான குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது சீனாவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருங்கி வருவதால் இந்த நிமோனியாவால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமபடுகின்றன. தேசிய சுகாதார ஆணையத்தின் சீன அதிகாரி கடந்த 12-ஆம் தேதி செய்தியாளர் மாநாட்டை நடத்தி சீனாவில் சுவாச நோய் பற்றிய தகவலை வழங்கினார். இந்த நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த சிறப்பு அறிகுறியும் காட்டவில்லை, ஆனால் அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்து வருவதாக கூறினார்.

சீனாவில் நிமோனியாவால் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால்  சீனாவில் உள்ள மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தான் இந்த தொற்று  பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கை கேட்ட உலக சுகாதார அமைப்பு (WHO):

இதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2, மைக்கோபிளாஸ்மா நிமோனியா இன்னும் பிற தொற்றுகள் ஆகியனவற்றின் தொடர்பான கூடுதல் நிலவரம் குறித்து தெளிவான அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார நிறுவனம் சீன அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். தற்போது பரவும் இந்த மர்ம நிமோனியாவால் உலக நாடுகள் பீதியில் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளில் நோய் பரவுவதைக் கண்காணிக்கும் ஒரு நிறுவனமான ProMed  சீனாவில் பரவும் இந்த நிமோனியா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோயின் முதல் மற்றும் மிகப்பெரிய அறிகுறி அதிக காய்ச்சல் என்றும் இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

Published by
murugan

Recent Posts

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

6 minutes ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

21 minutes ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

1 hour ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

2 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

2 hours ago

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…

3 hours ago