‘பேஸ் அப்’ மூலமாக 18 வருடங்கள் கழித்து காணாமல் போன மகனை கண்டு பிடித்த பெற்றோர் !

Published by
murugan

தற்போதிய கால காலத்தில் அனைத்து மக்களிடமும் செல்போன் என்பது தங்களின் மூன்றாவது கைபோல உள்ளது. செல்போனில் பயன்படுத்தபடும் அப்ளிகேஷன்களில் , வாட்ஸ் ஆப் , இன்ஸ்ட்ராகிராம் , பேஸ் புக் ,போன்ற அப்ளிகேஷன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது  ட்ரெண்டிங் ஆகிவரும் அப்ளிகேஷன்களில்‘பேஸ் அப்’  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம்  நமது தற்போதைய புகைப்படத்தை வைத்து வயதானால் எப்படி இருப்போம்? சிறுவயதில் எப்படி இருந்தோம்?  என்பதை பார்ப்பதற்கு இந்த அப்ளிகேஷன்  பயன்படுகிறது.

Yu Weifeng before his disappearance in 2001. Credit: AsiaWire

இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி  தனிநபர் புகைப்படத்தை சேகரித்து வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில்  இந்த அப்ளிகேஷனைப்  பயன்படுத்தி சீனாவில்  18 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகன் யு வீபெங் 3 வயதா க இருக்கும் போது இவர் கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம்காணாமல் போனார் . பிறகு யு வீபெங் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார் பல நாள்களாக விசாரணை நடத்தியும் அந்த சிறுவன் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள பேஸ் ஆப் மூலம் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதை தொடர்ந்து யு வீபெங்  சிறுவயது  புகைப்படத்தை கொண்டு தற்போது வயதுக்கு எப்படி இருப்பார் என எண்ணி அதற்கு எற்ப புகைப்படத்தை மாற்றினர்.

மாற்றிய  புகைப்படங்கள் வைத்து போலீசார் உதவியுடன் பெற்றோர்கள் தங்கள் மகனை தேடி வந்தனர்.அப்போது கவுங்சோ மாகாணத்தில் படித்து வரும் ஒரு மாணவரின் முகத்துடன்  அப்புகைப்படம் ஒத்துப்போனது.

பின்னர் அந்த மாணவனிடம் போலீசார்  விவரத்தை எடுத்து கூறினர்.பிறகு யு வீபெங்கிற்கு  டி.என்.ஏ. பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில்  காணாமல் போன யு வீபெங் என்பது தெரியவந்தது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் இணைத்து உள்ளார்.

Published by
murugan

Recent Posts

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…

15 minutes ago

TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…

49 minutes ago

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

2 hours ago

“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!

வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…

3 hours ago

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்! விவசாயிகள் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா?

சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…

4 hours ago

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…

16 hours ago