Amoeba [Imagesource : Representative]
அமெரிக்கா நாட்டில் கொலம்பியாவில், புக்காரமங்காவைச் சேர்ந்த ஸ்டெபானியா என்ற சிறுமி சான்டா மார்ட்டாவில் உள்ள தண்ணீரில் விளையாடியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.
ஆரம்பத்தில், அந்த சிறுமிக்கு காது வலிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பின், படுக்கையில் இருந்து எழுந்திருக்க சிரமப்பட்டார் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.!
அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். மருத்துவமனையில், அவர் இறப்பதற்கு முன் 3 வாரங்களாக சிகிச்சையளிக்கப்பட்டது. பல வாரங்கள் ஆய்வு செய்த பிறகு, நிபுணர்கள் அவர் அமீபிக் என்செபாலிடிஸ் நோயால் இறந்ததாகக் கூறினர்.
இது மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு அரிய தொற்று, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால், இறப்புக்கான 95% வாய்ப்பு காணப்படும். இது பெரும்பாலும் “மூளையை உண்ணும் அமீபா” என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோலேரியால் ஏற்படக்கூடியது. இவை பெரும்பாலும் குளங்கள் அல்லது தேங்கி நிற்கும் நீரில் காணப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில், ஜூன் மாதம் கொலம்பியாவில் உள்ள சான்டா மார்ட்டாவில் உள்ள தண்ணீரில் விளையாடிய போது, தன் மகள் மூக்கின் வழியாக இந்த நோய் பரவியதாக தாய் டாடியானா கோன்சாலஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…