Categories: உலகம்

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு – 28 பேர் பலி.. 90 க்கும் மேற்பட்டோர் காயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 28 பேர் உயிரிழப்பு. 

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் வழிபாட்டு நேரத்தின்போது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், குறைந்தது 50 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. குண்டுவெடிப்பு நடந்தபோது மசூதி உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

பலத்த பாதுகாப்புடன் போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மசூதியின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறப்பு எண்ணிக்கை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இறப்பு அதிகரிக்கலாம் என்றும் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!

ENGvsAUS : தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…

3 hours ago

“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!

சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…

11 hours ago

தெரிக்கவிடலாமா.. துபாயில் ரேஸ் காரை ஓட்டி பார்த்த நடிகர் அஜித்.!

சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…

11 hours ago

3 ஏ.டி.எம் கொள்ளை., ரூ.65 லட்சம் பணம்.! கேரளா போலீஸ் பரபரப்பு தகவல்கள்…

நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…

11 hours ago

சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…

11 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?

சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள்  படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…

11 hours ago