Categories: உலகம்

அடுத்தடுத்து சிறை தண்டனை.! இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள்.!

Published by
மணிகண்டன்

கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் . இந்த வேளையில், அவர் பிரதமர் பதவி வகித்த நேரத்தில் பதியப்பட்ட 2 வழக்குகளில் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து சிறை தண்டனை தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

சர்வதேச சதி :

நேற்று, அரசு ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில்  இம்ரான் கான் பதவியில் இருந்த போது, தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சர்வதேச அளவில் சதிவேலைகள் நடக்கிறது. என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் உங்கள் குற்றங்கள் நீக்கப்படும் என ஒரு சர்வதேச நாடு கூறியுள்ளது என பொதுவெளியில் கூறினார்.

அரசு ரகசியங்கள் :

அந்த சமயம் தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர், பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்ரான் கான் குற்றசாட்டை அப்போதே அமெரிக்கா மறுத்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தான் , பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.  அரசு ரகசியங்களை பொது வெளியில் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், அரசு ரகசியங்களை பொதுவெளியில் கூறியது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறப்பட்டது.

தோஷகானா வழக்கு :

இதனை அடுத்து இன்றும் அரசு கருவூலம் தொடர்பான தோஷகானா வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில், இம்ரான் கான் பிரதமர் பொறுப்பில் இருந்த காலத்தில் பிரதமருக்கு வழங்கப்பட்ட அரசு பரிசு பொருட்களை மறைத்து  அதனை விற்றதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று வெளியான தீர்ப்பில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் குற்றவாளி என்றும், அவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் நீதிபதி முகமது பஷீர் தீர்ப்பளித்துள்ளார். மேலும்,  78.7 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago