பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு போலந்தில் தொடங்கியது. உலக வெப்பமயமாதல் சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே இதனை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து இலக்கு நிர்ணயித்தன. இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க, ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் ஒன்று கூடியுள்ளனர். […]
இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் பரஸ்பர ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் குற்றம்புரிந்துவிட்டு வெளிநாடுகளில் சில குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுகின்றனர். அவர்களை மீண்டும் இந்தியா அழைத்து வர வேண்டுமென்றால் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். இந்தநிலையில் ஸ்பெயினுடன் இந்தியா மேற்கொண்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படாது என ஸ்பெயினிடம் இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. […]
ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு பொதுத்தேர்தலே ஒரே வழியென, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஜனநாயகமும் பொதுத்தேர்தல்களும் என்ற அறிக்கையில், இலங்கையின் அரசியலமைப்பின் படி இறைமை என்பது மக்களிடத்தில் தான் உள்ளதே தவிர நாடாளுமன்றத்திடம் இல்லை என்று கூறியுள்ளார். மக்கள் தங்கள் இறைமையை வாக்களிப்பு மூலமே பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்ச, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை இலங்கையில் மட்டும்தான் காணமுடிகிறது என்று கூறியுள்ளார். ஆறு மாகாண சபைகள் […]
பிரான்ஸ் நாட்டில் போராட்டக்காரர்களால் நாடு சூறையாடப்பட்டு கலவரம் பலம் பெற்று வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படப்படும் எனக் கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான வரியானது அதிகபடுத்தபட்டுள்ளது.இதனை கண்டித்து இன்று அந்நாடு முழுவதும் மக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டங்கள் ட்விட்டரில் #YELLOW JACKETS என்ற ஹெஸ்டேக்கில் பதிவிடப்பட்டு வருகின்றனர் போராட்டக்காரர்கள்.இந்நிலையில் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் முகமூடி அணிந்து வந்த இளைஞர்கள் பலர் கலவரங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் […]
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கையில் பெரும்பான்மையுடன் பதவி வகித்த ரனில் விக்ரமசிங்கே, தம்மை கொலை செய்ய சதி செய்ததாக பிரதமர் பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். இது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜபக்சே திணறினார். இந்நிலையில், தமிழ் […]
எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்காக ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேர் இந்த விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் […]
உலக அளவில் தொழில் நுட்பத் துறையில் சிறந்து விளங்கும், 50 பெண்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்துள்ளனர். நியூயார்கிலிருந்து வெளி வரும் பிரபல பத்திரிகையான, போர்ப்ஸ் உலக அளவில், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் 50 பெண்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வம்சவளியை சேர்ந்த 4 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில், இந்திய வம்சாவளியான’சிஸ்கோ’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, பத்மஸ்ரீ வாரியர் (Padmasree warrior) ‘உபேர்’ நிறுவனத்தின் […]
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க […]
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்தை எட்டியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை என கூறப்பட்டது. இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டின் ஜிடிபி […]
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கே பிரதமர் பதவி என, இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். ஆனால் இதனை ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்து விட்டார். இதனால் அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே, ராபக்சவின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கு இலங்கை நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவி வழங்க, அதிபர் […]
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆவார்.இவருக்கு வயது 94 ஆகும். இவர் அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர். ஆவார்.அதேபோல் 43வது துணை அதிபராகவும் பதவி வகித்தவர். 1989 முதல் 1993 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வாகனங்கள் எரிந்து நாசமாகின. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நேற்று நள்ளிரவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை அங்கே இருந்த வீடு ஒன்றின் மீது வீசி விட்டு சென்றது. இதனால் அந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து நாசமாகின. வீட்டின் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். www.dinasuvadu.com
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது. “நாட்டுக்கு வெளியே நடைபெறும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த அனுமதிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. பாகிஸ்தான் மக்களின் மனநிலை மாறிவிட்டது. பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் அமைதியாக இருக்கவே விரும்புகிறார்கள்.காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியுமா? என்று கேட்டதற்கு, “முடியாதது எதுவும் இல்லை. எந்த பிரச்சினை குறித்தும் பேசுவதற்கு நான் தயார். காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவம் […]
இலங்கையில் அதிபர் சிறிசேனா, ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ஜனநாயக இயக்கத்தினர் 10 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, அந்த பதவிக்கு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். இதைத் தொடர்ந்து ராஜ்பக்சே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டியிருந்த சூழலில் நாடாளுமன்றத்தையும் முடக்க உத்தரவிட்டார். இந்த விவகாரம் இலங்கை அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபர் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, […]
பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளது அபுதாபி போலீசார். பூச்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து வருகின்றனர் அபுதாபி போலீசார்.நவீன தொழில்நுட்பங்களை தற்போது குற்றவாளிகளை கண்டுபிடிக்க அபுதாபி போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒருபடி அபுதாபி போலீசார் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றியுள்ளனர்.பூச்சிகள் மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர் அபுதாபி போலீசார். https://www.facebook.com/taqwamuslim/videos/285221872299196/ அதேபோல் பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளதாக அபுதாபி போலீஸ் உயர் அதிகாரி […]
இன்று கோலாகலமாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் நடைபெற்றது. இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெகன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம் […]
இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி சந்தித்துப் பேசுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டு உள்ளது. அணு ஆயுதங்களை கைவிடும் பிரச்சினையில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தனக்கு மென்மேலும் அழுத்தம் தருவதாக வடகொரியா கருதுகிறது.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென வட கொரியா, டிரம்புடனான […]
இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மெர்கலுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக மெர்கலின் தந்தை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, மெர்கலின் வேண்டுகோளை ஏற்று சார்லஸ், அவருக்கும் தந்தை இடத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். 36 வயதாகும் […]