உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பாது என பைடன் அறிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைக்கு இடையில் நடக்கும் போரில் உக்ரைனுக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை அனுப்ப போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள், உக்ரேனிய வீரர்களின் பலத்தை அதிகரிக்க போர் டாங்கிகளை அனுப்ப முடிவு செய்தது.
ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், உக்ரேனை ஆதரிக்கும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிடென் ஐரோப்பாவிற்கு பயணிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, உக்ரைனுக்கு ஆதரவாக ஜெட் விமானங்களை அனுப்ப உள்ளீர்களா.? என்று அதிபரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அதிபர் ஜோ பைடன், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போருக்கு உதவ உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பப் போவதில்லை என்று பதிலளித்தார். பைடன் நட்பு நாடான போலந்துக்குச் செல்லப் போவதாகவும், அது எப்போது என்று அவருக்கு தெரியவில்லை என்றும் மேலும் கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…