வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 10 நாள் நினைவு அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் (Kim Jong il) அவர்களின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 17 ) அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி வட கொரியா அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை வட கொரியாவில் விதித்துள்ளது. அதுவும் இன்று முதல் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள் நினைவு தினம் அனுசரிப்பை முன்னிட்டு அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளில் முக்கியமானவை என்னவென்றால், 10 நாட்கள் நாட்டுமக்கள் சிரிக்க கூடாது. 10 நாட்கள் யாரும் மது அருந்த கூடாது. தேவையான அதவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்ற பொருட்களை வாங்க ஷாப்பிங் செல்ல கூடாது.
பிறந்தநாள் பார்ட்டி, இறுதி சடங்கு ஊர்வலங்கள் போன்றவை பிரமாண்டமாக நடத்த கூடாது. என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதாம்.
ஏற்கனவே இதே போல கடந்த முறை நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட போது, வட கொரியாவில் பலர் மது அருந்தியதாகவும், கட்டுப்பாடுகளை மீறியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டதாம்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…