Categories: உலகம்

ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 5 மாதங்களுக்கு பிறகு, நேபாளம் அதிகாரப்பூர்வமாக ஒரே பாலின திருமணத்தின் முதல் பதிவை செய்துள்ளது. இதனால், ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் ஆகும்.

நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007-ம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து 2015ம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்பு சட்டத்திலும் பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேபாளத்தில் மாயா குருங் (வயது 35) என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே (வயது 27) என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டபூர்வமாக நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கணவன் – மனைவி சண்டை.! டெல்லியில் தரையிறங்கிய பாங்காங் விமானம்.!

இதுதொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூன் 27 அன்று தன் பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ஓரினச்சேர்க்கை திருமணத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான வரலாற்று உத்தரவு இருந்தபோதிலும், காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் நான்கு மாதங்களுக்கு முன்பு தேவையான சட்டங்கள் இல்லாததைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கையை நிராகரித்தது. அந்த சமயத்தில் சுரேந்திர பாண்டே மற்றும் மாயாவின் திருமண விண்ணப்ப பதிவு நிராகரிக்கப்பட்டது.

இதன்பின், உச்சநீதிமன்றம் தன் பாலினத் திருமணங்கள் பதிவு செய்ய சட்ட அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வந்து 5 மாதங்கள் ஆன நிலையில், மாயா குருங் என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டப்பூர்வமாக நடந்த திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.  இதனால் ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் ஆகும்.

இதுதொடர்பாக ப்ளூ டயமண்ட் சொசைட்டியின் தலைவர் சஞ்சிப் குருங் (பிங்கி) கூறியதாவது, மாயா குருங், சுரேந்திர பாண்டே ஆகியோரது திருமணம் மேற்கு நேபாளத்தில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தின் டோர்டி கிராமப்புற நகராட்சியில் பதிவு செய்யப்பட்டது.  நேபாளத்தில் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக பாடுபடுகிறோம். நேபாளத்தின் மூன்றாம் பாலின சமூகமான எங்களுக்கு இது ஒரு பெரிய சாதனையாகும். இதை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக, சம பாலினத் திருமணங்களை அதிகாரபூா்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று நேபாளத்தில் தொடங்கப்பட்டது. நாங்கள் இந்த முடிவை வரவேற்கிறோம். குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நவல்பரசி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திராவும், லாம்ஜங் மாவட்டத்தைச் சேர்ந்த மாயாவும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

பல மூன்றாம் பாலின தம்பதிகள் தங்கள் அடையாளங்கள் மற்றும் உரிமைகள் இல்லாமல் வாழ்கின்றனர். இது அவர்களுக்கு நிறைய உதவப் போகிறது. இந்த சமூகத்தின் மற்ற மக்களுக்கு அவர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான கதவு இப்போது திறக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்களின் திருமணம் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டு, தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அது தானாகவே நிரந்தர அங்கீகாரத்தைப் பெறும் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

5 minutes ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

37 minutes ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

1 hour ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

2 hours ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

3 hours ago

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…

3 hours ago