சூடானில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – WHO அறிவிப்பு…

Default Image

சூடான் ராணுவ மோதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக WHO தகவல்.

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது, இந்த மோதலில் 413 பேர் இறந்துள்ளனர் மற்றும் 3,551 பேர் காயமடைந்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும் என்று WHO செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்த வகையில், இறந்தவர்களில் குறைந்தது ஒன்பது குழந்தைகள் அடங்குவதாகவும், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான UNICEF மேலும் தெரிவித்துள்ளது.

72 மணி நேர போர் நிறுத்தம்:

தொடர் போர் காரணமாக பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. கடந்த சில நாட்களாக போர் நீடித்துவரும் நிலையில், ரம்ஜான் பண்டிகைக்காக அடுத்த 72 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்