cancels flights [file image]
மைக்ரோசாப்ட் முடக்கம் : மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் பிரச்னையால், உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் முடங்கியதால் விமான நிலையத்தில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொடர்பு பிரச்னையால் 1,390 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பாதிப்பால் விமானம் வருகை, புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, விமான போர்டிங் பாஸ்கள் கைகளால் எழுதப்படுகின்றன. கம்ப்யூட்டர்கள் வேலை செய்யாததால், மீண்டும் கைகளில் எழுதும் பழைய முறைக்கு திரும்பிய இண்டிகோ நிறுவனம். இதனை ஒருவர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் முடங்க காரணம் என்ன?
மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்க காரணமான ‘Crowdstrike’ இயங்குதள கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அது சரி செய்யப்பட்டு மாற்று ஃபைல்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ள அவர், படிப்படியாக சேவைகள் சரியாகும் என்று தெரிவித்துள்ளார். Mac, Linux ஆகிய Operating System-இல் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…